சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த பின்னர் இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கன் (Antony Blinken) உறுதியளித்துள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (13) பிற்பகல் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கனுடன் தொலைபேசியில் உரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது, சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் விளக்கினார்.
அத்துடன், அமெரிக்காவுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கை எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு இணக்கம் தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் உறுதியளித்துள்ளார்.
இதன் போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளின்கனிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment