எம்.பி. சனத் நிஷாந்த, மேயர் சமன் லாலுக்கு பிணை : டான் பிரியசாத்தின் பிணை நிராகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 15, 2022

எம்.பி. சனத் நிஷாந்த, மேயர் சமன் லாலுக்கு பிணை : டான் பிரியசாத்தின் பிணை நிராகரிப்பு

கடந்த மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, மொரட்டுவை மாநகர சபை மேயர் சமன்லால் பெனாண்டோ உள்ளிட்ட 03 சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, டான் பிரியசாத்தின் பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றையதினம் (15) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

கடந்த மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குல் சம்பவங்கள், வன்முறைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான, மிலான் ஜயதிலக மற்றும் சனத் நிஷாந்த ஆகியோர் கடந்த மே 17ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக உள்ளிட்ட 13 சந்தேகநபர்கள் கடந்த ஜூன் 08ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும், குறித்த சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, மொரட்டுவை மாநகர சபை மேயர் சமன் லால் பெனாண்டோ, டான் பிரியசாத் உள்ளிட் நான்கு சந்தேகநபர்களுக்கும் இன்றையதினம் (15) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment