குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஷாபி ஷிகாப்தீன் தான் பணி இடை நிறுத்தப்பட்டிருந்த காலத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட வேதனத்தை அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வழங்கியுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் பணி இடைநிறுத்தப்பட்ட காலத்திற்கான ஊதியத்தை முழுமையாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, தான் பணியாற்றிய மருத்துவமனைக்கு அவர் தனது சம்பளம் முழுவதையும் வழங்கியுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொய் பொறாமை வெறுப்புணர்வை போர்த்திக் கொண்ட சிங்கள தீவிரவாதத்தின் வெட்கக்கேடான அத்தியாயம் சிறந்த தொழில்சார் நிபுணரின் வாழ்வை சிதைத்துவிட்டது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உங்கள் மீது உமிழப்பட்ட வெறுப்பிற்கு நீங்கள் வழங்கிய பதிலிற்காக வைத்தியர் ஷாபி அவர்களே உங்களிற்கு பாராட்டுக்கள், சிந்திக்கும் திறன் உடைய அனைத்து சிங்கள பிரஜைகளும் உங்களை வணங்குகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment