அமரகீர்த்தி அத்துக்கோரண எம்.பி. கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது : மஹிந்த கஹந்தகமகேவுக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Friday, June 3, 2022

அமரகீர்த்தி அத்துக்கோரண எம்.பி. கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது : மஹிந்த கஹந்தகமகேவுக்கு விளக்கமறியல்

கடந்த மே 09 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் போது ஶ்ரீ.ல.பொ.பெ. பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இதேவேளை, 'கோட்டா கோ கம' மற்றும் 'மைனா கோ கம' போராட்டக்களங்கள் மீதான் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் (02) கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமகேவுக்கு ஜூன் 08 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (03) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியிருந்தது.

மே 09ஆம் திகதி சம்பவங்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள மஹிந்த கஹந்தகமகே, நேற்றையதினம் (02) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment