போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சகல தரப்பினருக்கும் உரிமையுண்டு : அரச, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் : பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே முப்படையினர் - இராணுவ தளபதி - News View

About Us

About Us

Breaking

Monday, May 9, 2022

போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சகல தரப்பினருக்கும் உரிமையுண்டு : அரச, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் : பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே முப்படையினர் - இராணுவ தளபதி

(இராஜதுரை ஹஷான்)

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள நிலையில் பொதுமக்கள் ஒருவருக்குகொருவர் முரண்பட்டுக் கொள்வதால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சகல தரப்பினருக்கும் உரிமையுண்டு. அரச மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காமல் போராட்டத்தில் ஈடுபடலாம் என இராணுவ தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (9) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதி வழி போராட்டத்திற்கு மாத்திரம் குறைந்தப்பட்ச அளவில் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டனர். பொலிஸார் முழுமையாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார்கள்.

இரு தரப்பினருக்கு இடையிலான போராட்டம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இன்று நிலைமை கட்டுப்பாட்டை மீறி சென்றதை தொடர்ந்தே முப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடும் உரிமை சகல தரப்பினருக்கும் உண்டு. ஒருவரது உரிமை பிறருக்கு இடையூறை ஏற்படுத்தும் போது அது பாதிப்பை ஏற்படுத்தும். தற்போதைய நிலைமையில் நாட்டு மக்கள் அனைவரும் பொறுமையுடன் செயற்பட வேண்டும்.

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள பின்னணியில் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொள்வதால் எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.பிரச்சினைகள் மென்மேலும் தீவிரமடையும்.

பொதுமக்கள் அரச சொத்துகளுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டத்தில் ஈடுப்படலாம்.இராணுவத்தினர் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் சேவையில் ஈடுபடுவார்கள் என்றார்.

No comments:

Post a Comment