ஆளுங்கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வாகனங்கள் மற்றும் வீடுகள் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.
கொழும்பு காலி முகத்திடலில் அமைதி வழியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரச ஆதரவாளர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர்.
இதையடுத்து நாடளாவிய ரீதியில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியதுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டும், தீ வைக்கப்பட்டும் வருகின்றது.
குருணாகலில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டள்ளது. அத்துடன் குருணாகலில் உள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜோன்சன் பெர்னாண்டோவின் குருநாகலிலுள்ள கட்சி அலுவலகமும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
காலியிலுள்ள ரமேஷ் பத்திரணவின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தீக்கிரைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
கேகாலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிபால ஹேரத்தின் வீடும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.
பண்டாரவளையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு சொந்தமான கடையொன்றும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.
மாத்தறை பகுதியில் உள்ள அமைச்சர் காஞ்சன விஜயசேகரவின் வீடும் உடைத்து நெருக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு கொச்சிக்கடையில் அமைந்துள்ள அருந்திக பெர்னாண்டோவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹம்பாந்தோட்டை மெதமுலனையில் அமைந்துள்ள ராஜபக்ஷக்களின் பெற்றோர்களின் நினைவுத் தூபிகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment