திருகோணமலை கடற்படை தளத்தில் மஹிந்த உள்ளிட்ட குடும்பத்தினர்? : முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 10, 2022

திருகோணமலை கடற்படை தளத்தில் மஹிந்த உள்ளிட்ட குடும்பத்தினர்? : முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்!

திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு பொதுமக்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பு கருதி திருகோணமலை கிழக்கு கட்டளை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையிலேயே பொதுமக்கள் இவ்வாறு அங்கு கூடி ஆர்ப்பாட்த்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வி.வி.ஐ.பிகளுடன் இன்று கொழும்பில் இருந்து சில ஹெலிகாப்டர்கள் சென்றதாகவும் அதில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருந்ததாகவும் காணொளிகள் வெளியாகின.

இவ்வாறு சென்றவர்கள் அனைவரும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அங்கிருக்கும் ராஜபக்ஷர்களை வெளியே அனுப்புமாறு கோரி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு வெளியே போராட்டம் இடம்பெற்று வருகின்றது.


No comments:

Post a Comment