(எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக் காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதல் தொடர்பில் பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவர் அருன பிரியதர்ஷன கைது செய்யப்பட்டுள்ளார்.
சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு அவரை இன்று (30) மாலை, அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்ததாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 17 ஆவது சந்தேக நபராக பெயரிட்டு நாளை (31) நீதிமன்றில் சி.ஐ.டி.யினர் ஆஜர் செய்யவுள்ளனர்
No comments:
Post a Comment