மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 10, 2022

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி

பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த இருவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டவாட்சியை உறுதிப்படுத்த முடியாமற்போனமை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment