(செ.திவாகரன்)
நுவரெலியா பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் வர்த்தகர் ஒருவர் வடையின் விலையை காட்சிப்படுத்தாமல் வடை தயாரிக்கும் மூலப் பொருட்களின் விலையை காட்சிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆட்சியில் (2019) விற்பனையான விலையையும் தற்போதைய ஆட்சியில் விற்பனையாகும் (2022) விலையையும் காட்சிப்படுத்தி வடை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
பொருட்களின் விலையேற்றத்தால் தாம் வடையின் விலையை அதிகரித்துள்ளதாகவும், வடை விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர்கள் வினவியதால், வடை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலையை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment