இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் நேற்று (01) ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக இந்திய எல்லைப் பகுதியில் விசைப்படகு நிறுத்தப் பட்டிருப்பதைக் கண்டு படகில் வந்த 6 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் இலங்கை திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்பதும், எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் இந்திய கடற்படையினர் கைது செய்து காரைக்கால் துறைமுகத்துக்கு இன்று அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் கடலோர காவல் குழும ஆய்வாளர் ராஜா தலைமையில் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள், இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த அனுரா என்பவருக்குச் சொந்தமான விசை படகில் கடந்த 21 ஆம் திகதி திருகோணமலையில் இருந்து மீன் பிடிக்க வந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்தது தெரியவந்தது.
இதையடுத்து மதுஷ, அமில மசங்க, சுஜித் பண்டாரா, புத்திக்க, உஷன் மதுசன், துங்க மஹேல ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நாகை கடலோர காவல் குழும பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment