டொலர் தட்டுப்பாட்டால் மூன்று எரிவாயு கப்பல்கள் துறைமுகத்தில் ! சந்தையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்கு அதுவே காரணம் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 6, 2022

டொலர் தட்டுப்பாட்டால் மூன்று எரிவாயு கப்பல்கள் துறைமுகத்தில் ! சந்தையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்கு அதுவே காரணம்

சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் 3 கப்பல்கள் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் டொலர் இல்லாததால் சிலிண்டர்களை இறக்க முடியாதுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதனால் கடந்த முதலாம் திகதி முதல் நாட்டில் எந்த பிரதேசத்திற்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பகிர்ந்தளிக்க முடியாமல் உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

மேற்படி மூன்று கப்பல்களும் கடந்த முதலாம் திகதியிலிருந்து ஆறு தினங்களாக துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட நிலையில் ஒவ்வொரு கப்பலுக்கும் நாளாந்தம் 15,000 அமெரிக்கன் டொலர் தாமதத்திற்கான கட்டணம் வழங்க நேரிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் கப்பல் துறைமுகத்தில் நங்கூடரமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு செலுத்த வேண்டிய டொலர் இதுவரை கிடைக்கவில்லை.

நாளாந்தம் சுமார் 80,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வந்தன. அந்த நிலையில் கடந்த ஆறு தினங்களாக எந்தவொரு எரிவாயு சிலிண்டரும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நாட்டில் உருவாகியுள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, அது தொடர்பில் லாப் காஸ் நிறுவனம் தெரிவிக்கையில், நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்கு முடியாதுள்ளதாகவும் தற்போதைக்கு கொள்வனவு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தையில் லாப் காஸுக்கு பெரும் தட்டுப்பாடு நிலைவுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment