எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அவதானம் : நெருக்கடி நிலைக்கு இன்றுடன் தீர்வு கிட்டும் - காமினி லொகுகே - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 8, 2022

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அவதானம் : நெருக்கடி நிலைக்கு இன்றுடன் தீர்வு கிட்டும் - காமினி லொகுகே

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு இன்று அல்லது நாளையுடன் தீர்வு கிடைக்கப் பெறும். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என வலுசக்தி துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை நேரடியாக பெற்றுக் கொள்ள இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டீசல், பெற்றோல் மற்றும் உராய்வு எண்ணெய் இறக்குமதிக்கு தேவையான டொலர் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு இன்று அல்லது நாளையுடன் தீர்வு கிடைக்கப் பெறும்.

எரிபொருள் பற்றாக்குறை தோற்றம் பெறும் என்ற அச்சத்தின் காரணமாகவே பொதுமக்கள் வழமைக்கு மாறாக எரிபொருளை பெற்றுக் கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக வரிசையில் நிற்கிறார்கள்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலைமையில் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். எவ்வாறு இருப்பினும் எரிபொருள் விலையேற்றம் குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை.

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் நாட்களில் மின் விநியோக தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment