(இராஜதுரை ஹஷான்)
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காலத்தில் ஏற்பட்ட விளைவுகளை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை எதிர் கொண்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதிர்வரும் ஓரிரு நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண செயற்படுத்த வேண்டிய திட்டங்களை அமைச்சரவையில் பலமுறை முன்வைத்தும் அது செயற்படுத்தப்படாமலிருப்பது கவலைக்குரியது.
டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை எரிபொருள் நெருக்கடி தொடரும். நாட்டு மக்களிடம் உண்மையை குறிப்பிட்டால் மக்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள். அதனை விடுத்து பிரச்சினை ஒன்றுமில்லை என பொய்யுரைத்தால் அது பாரிய எதிர்விளைவுகளை தோற்றுவிக்கும்.
பொருளாதார நெருக்கடியை சீர் செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது அவசியமாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய அச்சம் கொண்டுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment