இலங்கை உதைப்பந்தாட்ட வீரர் மாலைதீவில் மர்மமான முறையில் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, February 27, 2022

இலங்கை உதைப்பந்தாட்ட வீரர் மாலைதீவில் மர்மமான முறையில் உயிரிழப்பு



இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் நேற்று முன்தினம் (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார். 

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார். 

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர், பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார்.

இலங்கை அணியின் தேசிய அணியில் இடம் பிடித்த இவர், கால்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகாண் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதே நேரம் இலங்கை தேசிய அணியில் சிறந்த பின் கள வீரராக விளங்கினார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற SAFF கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ,இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருந்தினை பெற்றுக் கொண்டார்.

இந்த போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. இவ்வருடத்திற்கான மிக பிரபலமான வீரருக்காக இடம் பெற்ற கருத்து கணிப்பில் இரண்டாம் இடத்திற்கு பியூஸ்லஸ் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

No comments:

Post a Comment