ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனில் ஆளும் ஜனாதிபதியின் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுமாறு அந்நாட்டு ராணுவத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 2 ஆவது நாளாக இன்று (25) மேற்கொடுண்டு வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் இராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் எனவும் ரஷிய அமைச்சர் செர்ஜி லாவ்ரேவ் தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கையில் எடுக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷ்ய அரச தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புடின், உக்ரைனில் தற்போதைய அரசை அகற்றிவிட்டு இராணுவம் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்றும், அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் எளிதான தீர்வை எட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்-இல் உக்ரைன் குழுவுடன் பேச தயார் என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment