இங்கிலாந்து இளவரசருக்கு இரண்டாவது முறையாக கொரோனா - News View

About Us

About Us

Breaking

Friday, February 11, 2022

இங்கிலாந்து இளவரசருக்கு இரண்டாவது முறையாக கொரோனா

பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸுக்கு மீண்டும் கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. ஆனால் அப்போது அறிகுறிகள் மிதமாகவே இருந்தன.

73 வயது சார்ல்ஸ் தென்மேற்கு இங்கிலாந்தின் வின்செஸ்ட்டர் பகுதிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

இளவரசர் சார்ல்ஸின் தாயாரான எலிசபெத் அரசியார் அரசப் பொறுப்பை ஏற்ற 70ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவிருந்தார்.

ஆனால் இப்போது வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அவர் தனிமையில் இருப்பதாக அரண்மனை தெரிவித்தது.

அவரது உடல்நிலை குறித்தோ, அவர் தமது 95 வயதுத் தாயாரைச் சந்தித்தாரா என்பது குறித்தோ தகவல் இல்லை.

கடந்த புதனன்று அவர் ஒரு நிகழ்வில் பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனாக், சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித், உள்துறை அமைச்சர் பிரீத்தி படேல் ஆகியோரைச் சந்தித்தாகக் கூறப்பட்டது.

No comments:

Post a Comment