போதுமான மருந்து வகைகள் கையிருப்பில் உள்ளன - News View

About Us

About Us

Breaking

Sunday, February 27, 2022

போதுமான மருந்து வகைகள் கையிருப்பில் உள்ளன

அரச மருத்துவமனைகளில் அடுத்த மூன்று மாதங்களுக்கு போதுமான மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக அரச மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தனியார் துறைக்கு மருந்துகளை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி தொடர்பில் பல தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளரான வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பாரசிட்டமால் தேவை அதிகரித்துள்ளதால், பாரசிட்டமால் உற்பத்தியை துரிதப்படுத்துமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாரசிட்டமோல் மருந்தை மொத்தமாக கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமில்லை என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment