பாரிய பாதிப்பினை எதிர்கொண்டுள்ள அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 27, 2022

பாரிய பாதிப்பினை எதிர்கொண்டுள்ள அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு தேவையான கோதுமை மா, வெண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் பாமாயில் போன்றவற்றின் தட்டுப்பாடு காரணமாக தாங்கள் பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது பொதுமக்களும், பேக்கரி உள்ளிட்ட அனைத்து தொழில்துறையினரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன கூறியுள்ளார்.

சில மாதங்களாக கோதுமை மா தட்டுப்பாட்டால் தொழில்துறை பெரும் சுமையை எதிர்கொண்டதாகவும், தற்போது ஏனைய மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜெனரேட்டர்களை பயன்படுத்த முடியாத நிலையில், மின்வெட்டு காரணமாக பேக்கரிகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment