(எம்.எப்.எம்.பஸீர்)
தமது மூன்று மாதங்களேயான பெண் குழந்தையை விற்பனை செய்து, அப்பணத்தில் ஹெரோயின் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் தாய், தந்தையை குருணாகல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹெரோயின் போதைப் பொருளுடன் முதலில், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பயணப் பையில் சிறு குழந்தை ஒன்றின் சட்டை காணப்படவே, அதனை மையப்படுத்தி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளிலேயே விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டது.
இதன் பின்னர் குறித்த பெண்ணும், அவரது கணவனான குழந்தையின் தந்தையும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இதன்போது குருணாகல் பகுதி சட்டத்தரணி ஒருவர் ஊடாக கடிதம் ஒன்றினை எழுதி, 3 மாத பெண் குழந்தையை இந்த பெற்றோர் 7 இலட்சம் ரூபாவுக்கு அனுராதபுரம் பகுதியின் இளம் தம்பதியொன்றுக்கு விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
அவ்வாறு விற்பனை செய்தமை ஊடாக கிடைக்கப் பெற்றுள்ள 7 இலட்சம் ரூபாவில் 30 ஆயிரம் ரூபாவுக்கு போதைப் பொருள் கொள்வனவு செய்துள்ள இந்த தம்பதியினர் மிகுதி 6 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவையிம் வங்கியில் வைப்புச் செய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
No comments:
Post a Comment