கிளிநொச்சி, உமையாள்புரம், சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெருந்தொகையான பழைய எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் மீட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை எறிகணை ஒன்றினை வீட்டுக்குள் வைத்து கிறைன்டரினால் வெட்டியபோது குறித்த எறிகணை வெடித்ததில் 25 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அன்றையதினம் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் ஒரு சில வெடி பொருட்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து விசேட அதிரடிப் படையினரும் பொலிசாரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த வீட்டிலிருந்தும் வீட்டு காணிக்குள் இருந்தும் பெருந்தொகையான வெடிபொருட்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
(பரந்தன் நிருபர்)
No comments:
Post a Comment