லிபியாவில் முகம்மது அல் மெனிபி ஜனாதிபதியாக இருந்து வரும் நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு வருகின்ற 24ஆம் திகதி மற்றும் ஜனவரி 24ஆம் திகதி என 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
வடஆப்பிரிக்க நாடானா லிபியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்து வந்தவர் மோமர் அல் கடாபி. கடந்த 2011ஆம் ஆண்டு இவர் கிளர்ச்சிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு கடாபியின் மகன் சையிப் அல் இஸ்லாம் கடாபி கடந்த மாதம் 14ஆம் திகதி வேட்பு மனுதாக்கல் செய்தார். ஆனால் அவர் தனது தந்தையின் ஆட்சி காலத்தின் போராட்டக் காரர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்திய குற்றசாட்டை சுட்டிக்காட்டி அவரது வேட்பு மனுவை அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதை எதிர்த்து, சையிப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் நேற்று (3) இந்த வழக்கை விசாரித்த அந்த நாட்டு நீதிமன்றம், சையிப்பை தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்து, அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது.
இதனால் கடாபியின் மகன் சையிப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
No comments:
Post a Comment