நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் - இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் - இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

(இராஜதுரை ஹஷான்)

அமைச்சரவை தோல்வியடைந்துள்ளதால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது சிறந்ததாகும். தமக்கு தேவையான அரசாங்கத்தை தோற்றுவிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கிராமிய கலை கலாசார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள விரக்தி நிலை நாளுக்குநாள் அதிகரித்த நிலையில் செல்கிறது. தவறுகள் திருத்திக் கொள்ளப்படுவது அவசியமாகும்.

விவசாயத்துறை தொடர்பில் மாற்றுத்திட்டங்களை செயற்படுத்துவது அவசியமானதாகும். உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என பொருளாதார நிபுணர்களின் எதிர்வு கூறல் குறித்து விவசாயத்துறை அமைச்சு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment