சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் 2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது ! - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் 2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது !

நூருல் ஹுதா உமர்

2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று 2022.01.01 சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைபவ ரீதியாக இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த புதிய ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வில் வைத்திய அதிகாரிகளான டாக்டர் ஜே. சிவசுப்பிரமணியம், டாக்டர் எம்.ஏ. கரீமா சனூஸ், டாக்டர் எஸ்.ஜே. ஜஹான், டாக்டர் ஏ.ஜே.எப். பர்ஸானா, பல் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.ஐ.எம். நௌசாட், தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் பி.எம். நஸ்ருதீன், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ. புஹாது உட்பட அனைத்து உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் அரச சேவைக்கான உறுதிமொழி சத்திய பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது. 
இதன்போது கருத்து தெரிவிக்கையில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.கே. சனூஸ்,

2022 ஆம் ஆண்டில் சமூகப் பொருளாதார எதிர்பார்ப்புகளை அடைந்து கொள்ளும் பொருட்டு ஒருமித்த எண்ணத்துடன் அனைத்து அரசு ஊழியர்களும் செயற்படல் வேண்டும். அரச வளங்களை வினைத்திறன் மிக்கதாக முகாமைத்துவம் செய்து நிகழ்கால மற்றும் எதிர்கால பரம்பரையினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மனப்பாங்கு ரீதியான மாற்றத்தை அரச ஊழியர்கள் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

சுபீட்சமான இலங்கையினுள் பயனுள்ள பிரஜைகளை, மகிழ்ச்சியான குடும்பங்களை, பண்பாடான ஒழுக்க ரீதியான சமுதாயத்தை உருவாக்குவதற்காக அரச சேவையின் மகத்தான பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்க வேண்டியது அவசியம் என கூறினார்.

No comments:

Post a Comment