புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரோன் சர்வதேச அளவில் அதிகளவு பரவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த மாறுபாடு சில பகுதிகளில் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளளது.
இந்த நிலையில் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தவும், அத்தியாவசிய சுகாதார சேவைகள் நடைமுறையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் முன் அறிகுறிகளற்ற பல பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. இதனால் ஒட்டு மொத்த உலகளாவிய ஆபத்து மிகவும் அதிகமாக மதிப்பிடப்படுகிறது எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஒமிக்ரோன் வைரஸ் பரவுதல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, ஒமிக்ரோன் வைரஸ் நோய் எதிர்ப்பு திறனில் இருந்து தப்பிக்கும் தன்மை கொண்டதாக இருக்கலாம். மேலும் இதன் பரவுதல் வேகமும் அதிகரிக்கும். எனவே இது அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளது.
அது எங்கு அதிகமாக பரவுகிறது என்பதன் அடிப்படையில் அதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். ஒமிக்ரோனால் உலக அளவில் அதிக ஆபத்து ஏற்பட்டு இருப்பது ஆரம்ப கட்ட ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் ஒமிக்ரோன் தொடர்பாக இன்னும் முழுமையாக ஆய்வுகள் நடத்தப்படவில்லை. எனவே இதன் பாதிப்பு தொடர்பாக நிச்சயமற்ற அம்சங்கள் இருக்கின்றன.
ஏற்கனவே போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துமா? என்பதை கண்டறிய பல வாரங்கள் தேவைப்படும்.
தென் ஆப்பிரிக்காவில் அதிகம் பேருக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்கு ஒமிக்ரோன்தான் காரணமா என்று தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.
No comments:
Post a Comment