கொழும்பு - கண்டி : கீழ் கடுகண்ணாவை வீதியின் ஒரு ஒழுங்கை திறப்பு - அவதானமாக பயணிக்குமாறு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 17, 2021

கொழும்பு - கண்டி : கீழ் கடுகண்ணாவை வீதியின் ஒரு ஒழுங்கை திறப்பு - அவதானமாக பயணிக்குமாறு அறிவுறுத்தல்

கொழும்பு - கண்டி A1 பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவை பகுதியில் ஒரு ஒரு வழியான ஒழுங்கை போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வந்த மழை காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவு நிலை காரணமாக குறித்த பாதையின் மருங்கிலிருந்த பல கடைகள் மண்மேட்டிற்குள் அகப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து குறித்த பாதை கடந்த 10 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில், நேற்றுமுன்தினம் கேகாலை மாவட்ட செயலாளர் தலைமையில் கூடிய துறைசார் குழுவினர் கீழ் கடுகண்ணாவை வீதி தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு அவதானிப்புகளைத் தொடர்ந்து இன்று நண்பகல் முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாரதிகள் குறித்த வீதியை பயன்படுத்தும்போது உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பேணி அவதானமாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment