மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் யூ.எல்.எம். புஹாரி (ஆசிரியர்) இன்று காலை மரணித்து விட்ட செய்தி கேள்விப்பட்டு மிகவும் கவலை அடைந்தேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
மீராவோடை பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தவர்களில் மர்ஹூம் யூ.எல்.எம். புஹாரி (ஆசிரியர்) அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.
மீராவோடை அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துதல் தொடர்பாகவும் தனது பாடசாலை தேவைகள் தொடர்பில் அரசியல் வாதிகளோடு மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்பட்டவர் அவருடைய இழப்பு கல்விப் புலத்தில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்
அன்னாருடைய மறுமை வாழ்வு சிறப்பாக அமைந்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கம் கிடைக்க வேண்டும் என அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.
மேலும் அவரது மரணத்தினால் கவலையுற்றி இருக்கும் அன்னாருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் மன அமைதியை இறைவன் வழங்க பிரார்த்திக்கின்றேன்.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
No comments:
Post a Comment