உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியை தெரிந்து கொள்வது எமது உரிமை - வெளிப்படுத்துமாறு நாட்டின் தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் : பேராயர் - News View

About Us

About Us

Breaking

Monday, November 1, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியை தெரிந்து கொள்வது எமது உரிமை - வெளிப்படுத்துமாறு நாட்டின் தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் : பேராயர்

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னணியை முழுமையாக வெளிப்படுத்துமாறு நாட்டின் தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். இதனை தெரிந்து கொள்வது எமது உரிமையாகும். மாறாக இது எமக்கு வழங்கப்படும் அன்பளிப்பல்ல என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை மாத்திரமே தாம் எதிர்பார்ப்பதாகவும், அதிக பணத்தை வழங்க வேண்டும் என்றோ, ஏனைய வசதி வாய்ப்புக்களை செய்து கொடுக்க வேண்டும் என்றோ நாம் எதிர்பார்க்கவில்லை என்றும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.

நீர்கொழும்பு - கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட ஞாயிறு ஆராதனைகளின் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அப்பாவி மக்கள் எவ்வித காரணமும் இன்றி கொல்லப்படுவதற்கு ஏதுவாய் அமைந்த காரணி எது என்பதையே நாம் தொடர்ந்தும் வினவிக் கொண்டிருக்கின்றோம். இதனை தெரிந்து கொள்வது எமது உரிமையாகும். மாறாக இது எமக்கு வழங்கப்படும் அன்பளிப்பல்ல.

எனவே உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னணியை முழுமையாக வெளிப்படுத்துமாறு நாட்டின் தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். இதனை மீண்டும் அரசியல் தலைவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

இது முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக எம்மால் முன்னெடுக்கப்படும் போராட்டம் அல்ல. நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பது மாத்திரமே எமது கோரிக்கையாகும். மாறாக அதிக பணத்தை வழங்க வேண்டும் என்றோ, ஏனைய வசதி வாய்ப்புக்களை செய்து கொடுக்க வேண்டும் என்றோ நாம் எதிர்பார்க்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment