காவலில் இருந்த கைதி மரணம் : பனாமுரே பொலிஸார் இருவர் பணி இடைநீக்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 17, 2021

காவலில் இருந்த கைதி மரணம் : பனாமுரே பொலிஸார் இருவர் பணி இடைநீக்கம்

பனாமுரே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பனாமுரே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பனாமுரே, வெலிபொத பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் மீது குடும்பத் தகராறு தொடர்பாக அவரது மனைவி மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைக்கூண்டில் இருந்த குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவரை காப்பாற்ற முடியாமல் போனதாகவும் பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தை தொடர்ந்து இன்று (17) காலை, அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, குறித்த மரணத்திற்கு பொலிஸாரே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதற்கமைய விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment