எமது கருத்துக்களை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை, அதன் விளைவே தற்போது பாரிய சம்பவமாக மாறி இருக்கின்றது - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி - News View

About Us

About Us

Breaking

Sunday, October 24, 2021

எமது கருத்துக்களை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை, அதன் விளைவே தற்போது பாரிய சம்பவமாக மாறி இருக்கின்றது - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

(எம்.ஆர்.எம்.வசீம்)

இரசாயன உரம் இறக்குமதி செய்ய தடை வித்தித்த ஆரம்பத்திலேயே, அதனால் ஏற்படக் கூடிய பாதிப்பு தொடர்பாக அரசாங்கத்துக்கு எடுத்துக்கூறி இருந்தோம். என்றாலும் எமது கருத்துக்களை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவே தற்போது பாரிய சம்பவமாக மாறி இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வுவொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் இரசாயன உரம் இறக்குமதி செய்ய தடை வித்தது கடந்த போகத்தின் ஆரம்பத்திலாகும். இதன்போது அது தொடர்பில் ஊடகங்கள் ஊடாக விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டதுடன் விவசாயிகள் மத்தியிலும் அமைதியின்மை ஏற்பட்டு வீதிகளில் சிறிதளவில் போராட்டங்கள் நடத்துவந்ததை காணக்கூடியதாக இருந்தது.

அரசாங்கத்தின் இந்த தீர்மானம் நல்லதாக இருந்தாலும் இது அவசரப்பட்டு செய்யக் கூடிய விடயமல்ல என்பதை இதன் ஆரம்பத்திலேயே அரசாங்கத்தில் இருக்கும் பொறுப்பு வாய்ந்த அனைவருக்கும் தெரிவித்திருந்தேன்.

விசேடமாக இரசாயன உரத்தில் இருந்து சேதன உரத்துக்கு மாற்றுவதாக இருந்தால் அதனை உடனடியாக மேற்கொள்ள முடியாது. நானும் அமைச்சராக, ஜனாதிபதியாக இருந்து முன்மாதிரி நடவடிக்கையாக சேதன உரத்தில் விவசாயம் செய்தேன்.

அதனால் இந்த நடவடிக்கையை 10 வருடம் அல்லது 5 வருட வேலைத்திட்டமாக படிப்படியாகவே மேற்கொள்ள வேண்டும் என்பதை எடுத்து கூறியிருந்தேன். அதன் பின்னர் எமது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற குழு இது தொடர்பாக அரசாங்கத்தில் இருக்கும் தலைவர்களுக்கு தெனிவுபடுத்தி இருந்தது.

அத்துடன் உரப் பிரச்சினை மற்றும் அதனால் ஏற்பட்டிருக்கும் கவலைக்குரிய நிலைமைகள் தொடர்பாக தெளிவுபடுத்தி கட்சி என்ற அடிப்படையில் அரசாங்கத்துக்கு கடிதம் மூலம் அறிவுறுத்த நடவடிக்கை எடுத்தோம். எமது பொறுப்பை நாங்கள் சரியாக அரசாங்கத்துக்கு தெரிவித்திருந்தோம்.

என்றாலும் எமது கருத்துக்கள் ஆலாேசனைகளை அரசாங்கம் கருத்திற் கொள்ளவில்லை. அதனால்தான் தற்போது உரப் பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக மாறி இருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment