வாக்களித்த சிங்கள மக்களே அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் - மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Monday, October 18, 2021

வாக்களித்த சிங்கள மக்களே அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் - மனோ கணேசன்

வாக்களித்த சிங்கள மக்களே கோட்டபாய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

தற்போது தெற்கு அரசியலில் ஆட்சி மாற்றம் என்ற ஒரு காற்று வீசுகின்றது எனினும் எதிரணியினர் ஆகிய நாம் பொறுத்திருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அதாவது இந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு வாக்களித்த சிங்கள மக்களே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் எதிர்கட்சியாகிய நாங்கள் உள்ளோம் .

ஆனால் ஒரு கேள்வி எழுகின்றது நீங்கள் எதிர்க்கட்சிகள் ஏன் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என அதற்கு நாங்கள் கூறும் பதில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தை சிங்கள மக்களே நீங்கள் காணும் வீட்டுக்கு செல்லுங்கள் என்று கூறும் நிலைதான் தற்போது உருவாகி உள்ளது.

எனவே சிங்கள மக்களே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கும் போது நாங்கள் தற்போது அவசரப்பட வேண்டிய தேவை இல்லை என்றார்.

கேசரி 

No comments:

Post a Comment