ஆறு பலஸ்தீன மனித உரிமைக் குழுக்களை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு சர்வதேச உதவியையும் அது நாடியுள்ளது.
இந்த ஆறு அமைப்புகளையும் சட்டவிரோதமானவையாக அறிவிக்கும் இராணுவ உத்தரவு ஒன்றில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.
இந்த அமைப்புகள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்திய பலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி போராட்டக் குழுவுடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
1979 தொடக்கம் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணங்களை தயாரிக்கும் அல் ஹக் அமைப்பு இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்திருப்பதோடு சர்வதேச ஒருமைப்பாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கைதிகள் உரிமை பற்றி அவதானம் செலுத்தும் அத்தமீர் என்ற அமைப்பும் இந்தத் தடைப்பட்டியலில் உள்ளது.
இஸ்ரேல் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைப்பு விடுத்த முன்னணி அமைப்புகளில் ஒன்றாகவும் இது உள்ளது.
No comments:
Post a Comment