இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணியின் விபரத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
இளம் வீரர் சவுத் ஷகீல் தலைமையில் இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த மாதம் பாகிஸ்தான் ஏ, இலங்கை ஏ அணிகளுக்கிடையிலான போட்டி தொடர் இடம்பெறவுள்ளது.
அணி விபரம்
சவுத் ஷகீல் (தலைவர்), ஹைதர் அலி, அப்துல்லா ஷபிக், அப்ரார் அகமது, அப்பாஸ் அஃப்ரிடி, அகமது சாபி அப்துல்லா, அகிஃப் ஜாவித், அர்ஷத் இக்பால், இர்ஃபானுல்லா ஷா, கம்ரான் குலாம், குர்ராம் ஷெஹாசாத், முஹம்மது ஹாரிஸ், நசீம் ஷா, ஓமைர் பின் யூசுப், காசிம் அக்ரம், சல்மான் அலி ஆகா, சல்மான் கான், உஸ்மான் சலாவுதீன் மற்றும் ஜாஹித் மஹ்மூத்.
19 வீரர்களில், 14 பேர் இரு வடிவங்களுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், மூன்று பேர் (ஓமைர் பின் யூசுப், உஸ்மான் சலாஹுதீன், அகமது சபி அப்துல்லா) நான்கு நாட்கள் கொண்ட போட்டிளுக்கு மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர், இருவர் (அர்ஷத் இக்பால், அகிஃப் ஜாவேத்) 50 ஓவர் போட்டிகளில் மட்டும் பங்கேற்கிறார்கள் .
“இந்த அணியின் சராசரி வயது 22 க்கு கீழ் உள்ளது மற்றும் தேசிய அணிகளின் ஒரு பகுதியாக இருந்த அல்லது சர்வதேச கிரிக்கெட்டின் கதவுகளை தட்டும் வீரர்களை உள்ளடக்கியது என தேர்வுக்குழு கருத்து வெளியிட்டுள்ளது.
இலங்கை சுற்றுப்பயணம் இந்த திறமையான கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்களின் திறமைகளை மேலும் மெருகேற்றவும் உதவும், இதனால் அவர்கள் சர்வதேச அளவில் செயல்பட தயாராக உள்ளனர்.
ஒக்டோபர் 21 ஆம் திகதி பாகிஸ்தான் அணி இலங்கையை அடைகிறது, அதன் பிறகு ஒக்டோபர் 28 முதல் முதல் நான்கு நாள் போட்டி. இரண்டாவது போட்டி நவம்பர் 4 முதல் நடைபெறும்.
நவம்பர் 10, 12 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மூன்று 50 ஓவர் போட்டிகள் நடைபெறும்.
No comments:
Post a Comment