நேற்று (24) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ரி20 கிரிக்கெட் உலகக் கிண்ண லீக் போட்டியின் போது விளையாட்டின் ஒழுக்கத்தை பேணத் தவறியமை தொடர்பில் இலங்கை அணியின் லஹிரு குமார மற்றும் பங்களாதேஷ் அணியின் லிட்டன் தாஸ் ஆகியோருக்கு அபராதம் மற்றும் மறை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
நேற்றைய போட்டியின் போது, இலங்கை அணியின் பந்துவீச்சாளர் லஹிரு குமாரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த லிட்டன் தாஸிடம், லஹிரு குமார ஏதோ பேச பதிலுக்கு அவரும் ஏதோ பேச இருவருக்கும் வாய்த்தர்க்கம் இடம்பெற்ற நிலையில் அவர்களை சக வீரர்கள் மற்றும் நடுவர்கள் வந்து விலக்கிதைத் தொடர்ந்து நிலமை சுமுகமானது.
இவ்விடயம் தொடர்பில் இரு வீரர்களும் தங்களது குற்றங்களை ஒத்துக் கொண்டதால், சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) கிரிக்கெட் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில்,
இலங்கை அணியின் லஹிரு குமாரவிற்கு போட்டிக் கட்டணத்தில் 25% இனை அபராதமாக விதித்துள்ளதுடன், ஒரு மறை புள்ளியையும் வழங்கியுள்ளது.
பங்களாதேஷ் அணியின் லிட்டன் தாஸுக்கு போட்டிக் கட்டணத்தில் 15% இனை அபராதமாக விதித்துள்ளதுடன், ஒரு மறை புள்ளியையும் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment