சீனாவில் அதிகரிக்கும் கொரோனா - காலவரையின்றி பெய்ஜிங் மரதன் ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 25, 2021

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா - காலவரையின்றி பெய்ஜிங் மரதன் ஒத்திவைப்பு

சீனாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், பெய்ஜிங் மரதன் ஓட்டப் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

30,000 பேர் வரை பங்கேற்கவிருந்த மரதன் ஓட்டப் போட்டி ஓக்டோபர் 31ஆம் திகதி நடக்கவிருந்தது.

சீனாவின் 11 மாகாணங்களில் 133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தரப்பு கூறியுள்ளது. அவர்கள் அனைவருமே டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நான்ஜிங் கொரோனா பரவலுக்குப் பிறகு இதுதான் மிகப் பெரிய பரவலாக கருதப்படுகிறது.

அந்த நாடு கொரோனா தொற்றை முற்றாக இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் புதிய நோய்ப் பரவலுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.

நோய்ப் பாதிப்பு உள்ள பகுதிகளில் ஒட்டு மொத்த மக்களுக்கும் வைரஸ் சோதனை மேற்கொள்வது மற்றும் கடும் முடக்க நிலைகளை கடைப்பிடிப்பதை அது செயற்படுத்தி வருகிறது.

கடந்த 1981ஆம் ஆண்டு முதல் பெய்ஜிங் மரதன் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இது சீனாவின் மிகப்பெரிய உள்ளூர் விளையாட்டு நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மரதன் ஓட்டப் போட்டி பாரம்பரியமாக தியானென்மென் சதுக்கத்தில் தொடங்கி, பெய்ஜிங் ஒலிம்பிக் பூங்காவிலுள்ள கொண்டாட சதுக்கத்தில் நிறைவடையும்.

சீனாவில் 2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையிலேயே அங்கு நோய் பரவல் தீவிரம் அடைந்துள்ளது.

No comments:

Post a Comment