நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் 502 வெற்றிடங்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, October 25, 2021

நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் 502 வெற்றிடங்கள்

நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் 502 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இவ் வெற்றிடங்களில் 40 வைத்தியர்கள், 165 தாதியர்கள் மற்றும் உள்ளக சேவையாளர்கள் 90 பேரும் ஏனைய சேவையாளர்கள் 207 பேர் அடங்கலாக 502 வெற்றிடங்கள் உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் நாளாந்தம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராமத்தவர்கள் நகரத்தை சேர்ந்தவர்கள் என 2000 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று செல்வதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் கோவிட் தொற்று சிகிச்சை, சத்திர சிகிச்சை, மகபேற்று பிரிவு, சிறுவர் பிரிவு, ஏனைய ஆண், பெண் நோயாளர் என பல பிரிவுகள் உள்ளன.

தற்போது இவ் வைத்தியசாலையில் மூன்று மாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அதனை முழுமைப்படுத்தும் நோக்கில் 50 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொடுக்க உள்ளதாகவும், கட்டடத்திற்கான உபகரணங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலை மத்திய மாகாணத்தின் கீழ் இயங்கி வருகிறது அதனை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும். இவ் வைத்தியசாலை கட்டுமான பணிகள் பூர்த்தியானதும் இச் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என்றார்.

மஸ்கெலியா, நாவலப்பிட்டி நிருபர்கள்

No comments:

Post a Comment