O/L பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாவிடினும் மனம் தளரத் தேவையில்லை ! உயர்தரம் கற்று, பல்கலைக்கழகம் செல்வதற்கு கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 27, 2021

O/L பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாவிடினும் மனம் தளரத் தேவையில்லை ! உயர்தரம் கற்று, பல்கலைக்கழகம் செல்வதற்கு கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வாய்ப்பு

இம்முறை வெளியான க.பொ.த சாதாரண தர 2020 பரீட்சைப் பெறுபேற்றில் சகல பாடங்களிலும் சித்தியின்மை (W) பெற்றிருந்தாலும், உயர்தரம் கற்று பல்கலைக்கழகம் செல்லும் புதிய வாய்ப்பை கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. 

வரலாற்றில் முதல் தடவையாக இவ்வரிய வாய்ப்பை கல்வியமைச்சு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்துப் பாடங்களிலும் W என்ற சித்தியின்மையினைப் பெற்றிருந்தாலும், உயர்தரம் (A/L) இரண்டு வருடங்கள் கற்று பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை தற்போது கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.

இதன் முழுமையான விபரம் பின்வருமாறு
தற்போது உள்ள Bio, Maths, Commerce, Arts, E-Tech, B-Tech என்ற 6 பிரிவுகளுக்கும் மேலதிகமாக 7 ஆவது பிரிவாக தொழில் பிரிவு (Vocational Stream) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது O/L பரீட்சைப் பெறுபேற்றினைப் பெற்ற உயர் தரத்திற்கு இணையவுள்ள 2021/2023 ஆம் ஆண்டின் மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கு O/L பரீட்சைப் பெறுபேறு கவனத்திற் கொள்ளப்படமாட்டாது. all F/W பெறுபேறு பெற்றவர்களும் கற்கலாம்.

இரண்டு வருட கற்கை நெறியாகும் ஒவ்வொரு வருடத்திலும் 3 தவணை. அதாவது 2 வருடத்திலும் மொத்தம் 6 தவணைகளாகும்.

1 ஆம் வருடத்தில் ( first year)
1 ஆம் தவணையில் ஆரம்ப அறிமுகப் பாடங்களாக 9 பாடங்கள் நடைபெறும்.

தொழில் பிரிவு மாணவர்கள் இப்பாடங்களை(உ+ம் : தமிழ், சிங்களம், ஆங்கிலம், தொழில்வழிகாட்டல்கள், உளவியியல், ICT, தொழில் நுட்பம் இன்னும் பல...) கட்டாயம் எடுத்தாக வேண்டும் இதில் தெரிவு கிடையாது.

முதல் வருடத்தில் மீதமாகவுள்ள 2 ஆம்,3 ஆம் தவணைகளில் 26 பாடங்களில் (உ+ம் : QS, Web disining, ICT, பொறியியல், மின்னியியல், பிளம்பிங், Hotel Managment, பெண் அலங்காரம் போன்ற இன்னும் சில பாடங்கள்...) கட்டாயம் 3 பாடங்களை எடுத்தாக வேண்டும்.

2 ஆம் வருடம்(2nd year)
1 ஆம் வருடத்தில் 2 ஆம், 3 ஆம் தவணையில் எடுத்த மூன்று பாடங்களிலும் ஏதாவது ஒரு பாடத்தை தெரிவு செய்து 2 ஆம் வருடம் முழுவதும் அப்பாடம் ஒன்றினையே கற்று உயர்தரப் பொதுப் பரீட்சையில் அப்பாடமொன்றினையே பரீட்சை எழுதி பல்கலைக்கழகம் செல்ல முடியும். 

உதாரணமாக 2 ஆம் வருடத்தில் QS என்ற ஒரு பாடத்தினைக் கற்ற ஒருவர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற முடியும்.

தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச ரீதியான பல்கலைக்கழகமொன்று இரத்மலானையில் தொழில் பிரிவு பல்கலைக்கழகமாக தொழிற்பட்டுக் கொண்டு வருகின்றது. 

இலங்கையில் ஏற்கனவே 40 இற்கு மேற்பட்ட பாடசாலைகளில் தொழில் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

2020/2021 இல் சகல பல்கலைக்கழகங்களிலும் தொழில் பிரிவு பீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

உயர்தரப் பொதுப் பரீட்சையில் தொழில் பிரிவு மாணவர்கள் S தரத்தில் சித்தி பெற்றாலும், பல்கலைக்கழகம் போக முடியாவிட்டாலும் NVQ Level 4 (National Vocational Qualification Level 4) இனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

பல்கலைக்கழகங்களில் NVQ Level 5,6,7 முடித்து விட்டு பட்டத்தை (Degree) பெற்றுக் கொள்ள முடியும்.

பல்கலைக்கழகம் சென்றுதான் NVQ Level 7 இனைப் பெற வேண்டும் என்பதல்ல. அம்பாறை ஹாடி தொழில் நுட்பக் கல்லூரி போன்றவற்றிடமிருந்தும் இதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

வி.ரி. சகாதேவராஜா, காரைதீவு நிருபர்

No comments:

Post a Comment