ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதில் தவறில்லை, தனது முடிவு சரியானதே : மீண்டும் கூறியுள்ள ஜோ பைடன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 1, 2021

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதில் தவறில்லை, தனது முடிவு சரியானதே : மீண்டும் கூறியுள்ள ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெறும் தனது முடிவு சரியானதே என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

20 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஆப்கானிஸ்தானில் இருந்து படையினரை திரும்பப் பெறுவது அமெரிக்காவின் சிறந்த மற்றும் சரியான முடிவு என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கூறியுள்ளார்.

நான் உங்களுக்கு என் வார்த்தையை அளிக்கிறேன், இது சரியான முடிவு, புத்திசாலித்தனமான முடிவு மற்றும் அமெரிக்காவின் சிறந்த முடிவு என்று நான் முழு மனதுடன் நம்புகிறேன் என்று பைடன் செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் போர் முடிந்து விட்டது என்று தனது சக அமெரிக்கர்களிடம் கூறிய அவர், இந்த போரை எப்போது முடிப்பது என்ற பிரச்சினையை எதிர்கொண்ட நான்காவது ஜனாதிபதி தான் என்றும் தெரிவித்தார்.

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது, இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று அமெரிக்க மக்களுக்கு உறுதி அளித்தேன். அதன்படி செய்துள்ளேன்.

20 வருட யுத்தத்தில் 2,448 அமெரிக்க சேவை பணியாளர்கள் மற்றும் 3,846 அமெரிக்க இராணுவ ஒப்பந்தக்காரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் இது அமெரிக்காவிற்கு குறைந்தது 2.4 டிரில்லியன் டொலர் செலவை ஏற்படுத்தியது.

20 வருட யுத்தம் இனி அமெரிக்காவின் தேசிய நலனுக்கு சேவை செய்யாது என்றும் பைடன் கூறினார். ஆப்கானிஸ்தானில் இருந்து 1.2 லட்சம் பேரை விமானம் மூலம் மீட்ட படையினரை அவர் பாராட்டினார்.

அமெரிக்க ஜனாதிபதி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரை வெளியேற்றும் பணி "ஒரு அசாதாரண வெற்றி" என்று அழைத்தார், இருப்பினும் இது ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரால் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் போரைத் தொடங்கின. தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்டது.

ஆயினும் 20 ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் படைகளை விலக்கிக் கொண்ட பைடனின் முடிவு உள்நாட்டிலும் நட்பு நாடுகள் மத்தியிலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. படைகளை விலக்குவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதும் தலிபான்கள் மிக வேகமாக முன்னேறி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

No comments:

Post a Comment