சீனா, இந்தியா, அமரிக்கா இல்லை என்றால் சுவாசிக்கவும் முடியாது என்ற நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது : ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

சீனா, இந்தியா, அமரிக்கா இல்லை என்றால் சுவாசிக்கவும் முடியாது என்ற நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது : ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

(எம்.மனோசித்ரா)

சர்வதேச வல்லரசு நாடுகளின் கேந்திர நிலையமாக மாறியுள்ள இலங்கையானது, சீனா , இந்தியா, அமரிக்கா ஆகிய நாடுகள் இல்லை என்றால் சுவாசிக்கவும் முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரதிபலனே இந்த சீரழிவாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நாட்டுக்கு முதலீடுகள் அவசியமாகும். ஆனால் முதலீகளின் போது நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு இடமளிக்க முடியாது.

அமெரிக்காவின் தேவைக்கேற்ப இலங்கைக்கு மின் விநியோகத்தை வழங்க தன்னிச்சையான அதிகாரம் வழங்கப்படுமாயின் அது இலங்கையின் இறையான்மையை கேள்விக்குட்படுத்தும் என்றும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார்.

குருணாகல் பிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்.

தேசிய சொத்துக்கள் விற்கப்பட மாட்டாது என்று தெரிவித்து ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கம் அவற்றை விற்பனை செய்யும் போது பல பிரச்சினைகள் ஏற்படும். அது மாத்திரமல்ல. நாட்டில் மின் நுகர்வு 3500 மெகா வோல்ட் ஆகும். இதில் 1684 மெகா வோல்ட் ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்படுவதானது. 

அமெரிக்காவாக இருந்தாலும், சீனாவாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் பாரிய பிரச்சினைகள் ஏற்படக் கூடும். எனவேதான் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

நாட்டுக்கு முதலீடுகள் அவசியமாகும். ஆனால் முதலீகளின் போது நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு இடமளிக்க முடியாது.

அமெரிக்காவுக்கு தேவையானவாறு இலங்கைக்கு மின் விநியோகத்தை வழங்க தன்னிச்சையான அதிகாரம் வழங்கப்படுமாயின் அது இலங்கையின் இறையான்மையை கேள்விக்குட்படுத்தும்.

இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் இன்றி எம்மால் சுவாசிக்கவும் முடியாத என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 - 15 ஆண்டுகளாக எம்மால் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களின் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டமை, அதனையடுத்து இதில் ஒரு பகுதியை எவ்வாறு தம்வசப்படுத்துவது என்று இந்தியாவும், அமெரிக்காவும் பார்த்துக் கொண்டிருக்கிறன.

இலங்கையானது தற்போது சர்வதேச வல்லரசு நாடுகளின் கேந்திர நிலையமாக அமைந்துள்ளது. இந்த பல வந்த நாடுகளுடன் நாடு என்ற ரீதியில் எவ்வாறு முன்னோக்கி பயணிப்பது என்பதில் அவதானம் செலுத்த வேண்டும்.

இந்த 5 ஆண்டுகளில் நாட்டைக் காட்டிக் கொடுத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் உரிமை எமக்கில்லை. குறித்த 3 நாடுகளிடமிருந்தும் அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சுமூகமாக முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment