நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் எதிர்வரும் 05 ஆம் 6ஆம் திகதிகளில் திறக்கப்படுமென விவசாய இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் பேலியகொட மெனிங் சந்தையையும் 5ஆம் 6ஆம் திகதிகளில் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த வியாபாரத்துக்கு மாத்திரமே திறக்கப்படும். உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி மொத்த வியாபாரிகள் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொள்வனவின் பின்னர் பொருளாதார மத்திய நிலையங்களில் மிஞ்சும் மரக்கறிகள் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளை நடமாடும் வாகனங்களூடாக விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, பொருளாதார மத்திய நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார மத்திய நிலையங்களின் முகாமையாளருடன் தொடர்பினை மேற்கொண்டு, தங்களுக்கான பொருட்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும் எனவும் விவசாய இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment