வெற்றிலைக்கேணி, ஆளியவளை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இன்று காலை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் சுமார் 277 கிலோ மற்றும் 400 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
ஆளியவளை கடல் பகுதியில் இருந்து சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று கரையை நோக்கி சென்றதை கண்டு, வடக்கு கடற்படையினர் இந்த சிறப்பு நடவடிக்கையை இன்று காலை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த டிங்கி படகில் 05 சாக்குகளில் இந்த கேரள கஞ்சா அளவுகள் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் இவற்றின் மொத்த பெறுமதி 68 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
கடற்படையினரின் இந்த விசேட நடவடிக்கை கொவிட்-19 தடுப்பு நெறிமுறைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை தீ வைத்து அழிக்கப்பட்டது.
No comments:
Post a Comment