(எம்.எம்.சில்வெஸ்டர்)
16 ஆவது பரா ஒம்பிக்கின் ஆண்களுக்கான பிரிவு எப்.63 இன் குண்டெறிதல் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் பாலித்த ஹல்கஹவெல 13.40 மீற்றர் தூரம் வீசி 5 ஆவது இடத்தை பிடித்தார்.
இன்று இலங்கை நேரப்படி மாலை 4.14 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியில் பிரித்தானியாவின் டேவ்ஸ் அலெட் 15.33 மீற்றர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இப்போட்டியில் 14. 88 மீற்றர் தூரம் வீசிய ஈரானின் மொஹமதீன் சஜாட் வெள்ளிப் பதக்கத்தையும், 14.13 மீற்றர் தூரம் வீசிய குவைத்தின் சொரூர் பைசால் வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றுவரும் டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் 9 பேர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர். இதில் அனைவரும் சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்தி இலங்கைக்கு பெருமைத் தேடிக் கொடுத்தனர்.
இம்முறை பராலிம்பிக்கானது இலங்கைக்கு மறக்க முடியாத பராலிம்பிக்காக இது அமைந்தது. காரணம், பரா ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கை வென்ற முதல் தங்கப் பதக்கமாகும்.
பதக்கப்பட்டியலில் சீனா 93 தங்கம், 56 வெள்ளி, 50 வெண்கலம் அடங்கலாக 199 பதக்கங்களுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
பிரித்தானியா 41 தங்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், ரஷ்ய பராலிம்பிக் குழு 36 தங்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இலங்கை ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கத்துடன் 57 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment