முகக்கவசம் அணியச் சொன்ன PHI மீது மண் வெட்டி தாக்குதல் : ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, August 1, 2021

முகக்கவசம் அணியச் சொன்ன PHI மீது மண் வெட்டி தாக்குதல் : ஒருவர் கைது

முகக்கவசம் அணியுமாறு மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் எச்சரிக்கை செய்த PHI அதிகாரி ஒருவரை மண் வெட்டியால் தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வாழைச்சேனை பகுதியில் முகக்கவசம் அணியாது இருந்த நபரை முகக்கவசம் அணியுமாறு எச்சரிக்கை செய்த பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை அந்த நபர் மண் வெட்டியால் தாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது காயமடைந்த பொது சுகாதார பரிசோதகர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக மட்டகளப்பு வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment