சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியைப் பெற்று நாட்டின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதா ? சீனாவிடம் உதவியைப் பெற்று பிராந்திய நெருக்கடிகளை எதிர்கொள்வதா ? : ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Sunday, August 8, 2021

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியைப் பெற்று நாட்டின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதா ? சீனாவிடம் உதவியைப் பெற்று பிராந்திய நெருக்கடிகளை எதிர்கொள்வதா ? : ஹர்ஷ டி சில்வா

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியைப் பெற்று நாட்டின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதா ? சீனாவிடம் உதவியைப் பெற்று அதன் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து பிராந்திய நெருக்கடிகளை எதிர்கொள்வதா ? என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் தமது கடனை முகாமைத்துவம் செய்ய முடியுமா என்பதை ஆராய்ந்த பின்னரே இலங்கைக்கு சீனா உதவ முன்வரும். ஆனால் இலங்கையில் அந்த நிலைமை இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் இதுவரையில் சர்வதே நாணய நிதியத்திடம் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை.

கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதியாகும் போது நாட்டில் 2.8 பில்லியன் டொலர் மாத்திரமே அந்நிய செலாவணி இருப்பு காணப்படுகிறது. தங்கத்தின் மதிப்பீட்டினை குறைக்கும் போது 2.35 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி இருப்பே எஞ்சியுள்ளது.

ஒரு மாதத்தின் இறக்குமதி செலவிற்கான இருப்பாக 1.6 பில்லியன் டொலர் மாத்திரமே உள்ளது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் ஸ்திரமாக இருந்தால் நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும்.

மக்களை பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பினை வழங்க நாம் தயாராக உள்ளோம். அரசாங்கம் அதன் தவறை உணர்ந்து செயற்பட வேண்டும். இதற்கு முன்னர் எந்தவொரு ஆட்சிக் காலத்திலும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை. மக்களை மேலும் மேலும் சிக்கலுக்குள் தள்ள வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment