மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான ரி 20 போட்டி தொடர் இடம் பெற்று வருகின்றது.
முதலாவது போட்டி மழையால் கழுவப்பட்டது. இரண்டாவது போட்டி நேற்றுமுன்தினம் நிறைவுக்கு வந்த நிலையில் விறுவிறுப்பான போட்டியில் பாகிஸ்தான் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவையாக இருந்தபோது நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் ஆகியோரால் ஷஹீன் ஷா அஃப்ரிடி ஓவரில் 13 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள முடியாமல் தோல்வியைத் தழுவினர்.
இதேநேரம் நேற்றுமுன்தினம் பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் ஒரு உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
ஏற்கனவே கோலியுடைய சாதனைகள் ஒவ்வொன்றாக முறியடித்து வரும் பாபர் அசாம், நேற்றுமுன்தினம் கோலியின் சாதனையை முறியடித்தார். வேகமாக 20 க்கு 20 போட்டிகளில் அரைச்சதங்களை பெற்றுக் கொண்டவர் என்றும் சாதனை பாபர் அசாம் வசமானது.
அவர் 56 ஆவது இன்னிங்சில் 20 வது அரைச்சதத்தை பெற்றுக் கொண்டார், விராட் கோலி 65 இன்னிங்சில் 20 அரைச்சதங்களைப் பெற்றுக் கொண்டமையே உலக சாதனையாக இருந்தது. இதனை பாபர் அசாம் முறியடித்திருக்கிறார்.
இந்த பட்டியலில் ரோகித் சர்மா 99 வது இன்னிங்சில் 20 அரைசதங்கள் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில் கோலியின் ஒவ்வொரு சாதனைகளாக பாபர் அசாம் முறியடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment