விமான நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு : காபூலுக்கு வர வேண்டாமென அமெரிக்கர்ளுக்கு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, August 22, 2021

விமான நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு : காபூலுக்கு வர வேண்டாமென அமெரிக்கர்ளுக்கு எச்சரிக்கை

காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்துள்ளதால் விமான நிலையத்தை சுற்றிலும் அமெரிக்க படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

காபூலில் உள்ள விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுவதால் அந்த விமான நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் குவிந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் காபூல் விமான நிலையத்தை பயன்படுத்தி தங்கள் நாட்டு மக்களை மீட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்துள்ளதால் விமான நிலையத்தை சுற்றிலும் அமெரிக்க படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் விமான நிலையத்திற்குள் நுழைய முயற்சித்தனர். அப்போது, அந்த கூட்டத்தில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் கூட்டத்தின் முன்வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். மேலும், அதிக கூட்டம் இருந்ததால் பலரும் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். நீண்ட நேரமாக வெயிலில் அமர்ந்திருந்ததால் சோர்வாக இருந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பிரிட்டன் வெளியுறவுத் துறை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஐ.எஸ் அமைப்பால் தாக்குதல் நடத்தப்படலாம் என்கின்ற அச்சத்தில், அமெரிக்க மக்கள் காபூல் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என எச்சரித்துள்ளது அமெரிக்கா.

காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால், அங்கு வர வேண்டாம் என அமெரிக்கா சனிக்கிழமையே எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரசு தரப்பிலிருந்து, பயணம் மேற்கொள்ளுமாறு கூறுபவர்கள் மட்டும் காபூல் வந்தால் போதும் எனக் கூறியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளோ ஆஃப்கனில் சூழலை கண்காணித்து வருவதாகவும், மாற்று வழிகளைக் குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment