மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 15 பேர் பலி, தற்போது வரை 1556 கொரோனா தொற்றாளர்கள் - வைத்தியர் வினோதன் - News View

About Us

About Us

Breaking

Friday, August 27, 2021

மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 15 பேர் பலி, தற்போது வரை 1556 கொரோனா தொற்றாளர்கள் - வைத்தியர் வினோதன்

மன்னாரில் நேற்று வியாழக்கிழமை மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் வியாழக்கிழமை (27) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனையின் போது குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் குருநாகல் பகுதியை சேர்ந்த 82 வயதுடைய வயோதிபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வாரங்களாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

நேற்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் மாவட்டத்தில் இரண்டு கொரோனா மரணங்கள் இடம் பெற்றுள்ளன. மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் திகதி முதல் நேற்று வியாழக்கிழமை வரை 515 கொரோனா தொற்றாளர்களும் மாவட்டத்தில் தற்போது வரை 1556 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment