கட்டுப்பாடுகள் இல்லாத செயற்பாடுகளினால் நாட்டில் மீண்டும் வைரஸ் பரவல் நெருக்கடி நிலையொன்று உருவாகும் - எச்சரிக்கும் பொது சுகாதார பரிசோதகர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 14, 2021

கட்டுப்பாடுகள் இல்லாத செயற்பாடுகளினால் நாட்டில் மீண்டும் வைரஸ் பரவல் நெருக்கடி நிலையொன்று உருவாகும் - எச்சரிக்கும் பொது சுகாதார பரிசோதகர் சங்கம்

(ஆர்.யசி)

நாட்டில் புதிய வைரஸ் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகளின் மூலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் நாடு வழமையான செயற்பாடுகளுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகள் இல்லாத செயற்பாடுகளினால் நாட்டில் மீண்டும் வைரஸ் பரவல் நெருக்கடி நிலையொன்று உருவாக்குமென பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

நாட்டில் 25 வீதமான மக்களுகேனும் இப்போது தடுப்பூசி ஏற்றியிருக்க வேண்டும், ஆனால் 20 வீதமானவர்களுக்கு கூட தடுப்பூசி ஏற்றப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

நாடளாவிய ரீதியில் தற்போது கையாளப்படும் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள், சுகாதார பின்பற்றல்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் நிலைப்பாடு மற்றும், தனிமைப்படுத்தல் வழிமுறைகளின் கீழான செயற்பாடுகள் குறித்தும் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினா .

அவர் மேலும் கூறுகையில், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. நீதிமன்ற தீர்மானம் வழங்கப்பட்டுள்ள காரணத்தினால் அது குறித்து எம்மால் எதனையும் கூற முடியாது. ஆனால் சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமையவும் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டலுக்கு அமையவும் பிரதான விடயங்கள் தவிர்ந்து ஏனைய எக்காரணம் கொண்டும் பொதுமக்களை தனிமைப்படுத்துவதையோ அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவோ பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டாம்.

ஏதேனும் நெருக்கடிகள் என்றால் அதனை கையாள பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினால் நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கமைய சகல பொது சுகாதார பரிசோதகர் அதிகாரிகளுக்கும் நாம் அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும், நாட்டில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும், நாட்டில் 25 வீதமான மக்களுகேனும் இப்போது தடுப்பூசி ஏற்றியிருக்க வேண்டும், ஆனால் 20 வீதமானவர்களுக்கு கூட தடுப்பூசி ஏற்றப்படவில்லை.

அதேபோல் நாட்டில் புதிய வைரஸ் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகளின் மூலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் எவ்வாறான வைரஸ், திரிபுபட்ட கொவிட்-19 வைரஸ் பரவலா என்ற உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் நாடு வழமையான செயற்பாடுகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எந்தவித அச்சமும், கட்டுப்பாடுகளும் இல்லாது சாதாரணமாக செயற்பட்டு வருகின்றனர். இந்த செயற்பாடுகள் மீண்டும் நாட்டில் நெருக்கடி நிலைமையை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே மக்கள் சுகாதார வழிகாட்டலை முறையாக பின்பற்றி செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment