கல்கிஸை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த வழக்கில் மாலைத்தீவு பிரஜை உட்பட மேலும் நால்வர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வலைத்தள நிர்வாகிகள் மற்றும் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்காக அறை ஒன்றை வழங்கியிருந்த விருந்தகம் ஒன்றின் முகாமையாளர் ஆகியோருமே மற்றைய நபர்கள் ஆவர்.
கல்கிசை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்கான இணையத்தளம் விற்பனை செய்த விவகாரம் தொடர்பில் இதுவரையில் 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment