பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விபரப்பட்டியலை சபா பீடத்தில் சமர்ப்பித்தார் ஸ்ரீதரன் - News View

About Us

About Us

Breaking

Monday, July 19, 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விபரப்பட்டியலை சபா பீடத்தில் சமர்ப்பித்தார் ஸ்ரீதரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து பல்லாயிரக் கணக்கானவர்களின் உயிர்களை பலியெடுத்து இந்த நாடு உலகப்பந்திலே ஒரு பயங்கரமான சட்டத்தை வைத்திருக்கும் மிக மோசமான நாடு என்ற செய்தியை உலகம் முழுவதும் சொல்வதற்கு காரணமாகியுள்ளது.

இந்த சட்டம் இன்னும் நீக்கப்படாமல் இருப்பது நாட்டுக்கு மிகப்பெரிய அவமானமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

அத்தோடு, குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் கையளிக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 60 பேரின் விபரங்கள் அடங்கிய பட்டியலை சபா பீடத்தில் சமர்ப்பித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

No comments:

Post a Comment